ஒரு வாரத்துக்கு கன மழை இல்லை

சென்னை: 'தமிழகத்தில், இன்னும் ஒரு வாரத்துக்கு, பலத்த மழை இருக்காது' என, வானிலை மையம் கணித்துள்ளது.தென் மாநிலங்களில், தென் மேற்கு பருவ மழை
வெளுத்து வாங்கிய பின், வட மாநிலங்களுக்கு நகர்ந்துள்ளது.ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களில், காற்றழுத்த தாழ்வு பகுதியால், கன மழை பெய்துள்ளது.இந்நிலையில், 'தமிழகத்தில், 25ம் தேதி வரை, பலத்த மழைக்கு வாய்ப்பில்லை. வெப்பச் சலனம் காரணமாக, சில இடங்களில் திடீர் மழை பெய்யலாம்.'சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்; மாலை, இரவு நேரங்களில் வெப்ப சலன மழை பெய்யலாம்' என, சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.