CPS-அரசிற்கு நிதிச்சுமையையும் அரசு ஊழியர்களுக்கு வாழ்நாள் நெருக்கடியையும் தந்து கொண்டிருக்கும் -CPS திட்டத்தை முற்றிலுமாகக் கைவிட்டுவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். -திண்டுக்கல் எங்கெல்ஸ்.

ரூ.22,891கோடியை PFRDA-விடம் செலுத்தக்கோரி அல்ல!மாநில
நிதிச்சுமை குறைய CPS- முற்றாய் நீக்க வேண்டியே!

CPS-ல் பிடித்த பங்குத் தொகை ரூ.22,891 கோடியை PFRDA-விடம்செலுத்தக்கோரி போராடவில்லை.

அரசிற்கும்ஊழியர்களுக்கும் ஒருசேர பாதிப்பைஏற்படுத்தும் *CPSதிட்டத்தையே முற்றாய் நீக்கிவிட்டு,பழைய ஓய்வூதியத் திட்டத்தைமீண்டும்நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதேகோரிக்கை.

CPS-ஆல் ஊழியருக்குப் பாதிப்பாஅரசிற்கு பாதிப்பா?என்றால்இரண்டிற்கும் ஒரே பதில்,

*ஆம்!* என்பதே.

பழைய ஓய்வூதிய திட்டத்தின்படி அரசு தனது பங்காகஎவ்விதத் தொகையும்
செலுத்த வேண்டிய அவசியமில்லை._

ஆனால், *CPS திட்டத்தில் பணியேற்கும் ஊழியருக்கான10% தொகையைஊழியர்
பணியேற்ற மாதம் முதல் ஓய்வு பெறும் மாதம் வரைஅரசு செலுத்தியாக
வேண்டும்.*

இப்படியாக 2003-ல் இருந்து கடந்த 2017 மார்ச் மாதம்வரை CPSதிட்டத்திற்காகத் தமிழகத்தில் உள்ள அரசுஊழியர் & ஆசிரியர்களிடம் பிடித்தம்செய்த தொகைரூ.11,000 கோடி.

இதற்கு ஈடாக தமிழக அரசு செலுத்திய பங்கு ஈடுத்தொகை ரூ.11,000 கோடி.

அரசு & அரசு ஊழியர்களின் CPS பங்குத் தொகைகளின்கூடுதலான இந்தரூ.22,891 கோடியை இன்னும் ஏன் PFRDA-விடம் செலுத்த வில்லை எனக்கேட்டுப் போராடவில்லை.

மாறாக,

CPS திட்டத்தால் அரசு தரப்பு செலுத்த வேண்டியகட்டாயப் பங்குத்தொகையால் ஏற்பட்டுள்ளநிதிச்சுமையிலிருந்து அரசு விடுபட,

CPS- முற்றிலுமாக நீக்கிவிட்டுஎங்களின் ரூ.,000கோடியை வருங்காலவைப்பு நிதியில் சேர்த்து கொண்டுபழைய ஓய்வூதியத் திட்டத்தினைஎங்களுக்கு நடைமுறைப்படுத்த வேண்டும் .TET, TRB, TNPSC போன்ற போட்டித் தேர்வுகளால் அரசுப்பணியேற்கும்நபர்களின்
சராசரி பணிக்காலம் என்பது 35 ஆண்டுகள்.

அதே நபர்கள் பணி ஓய்வு பெற்ற பின்னான ஆயுட்காலம்என்பது சராசரியாக10 - 15 ஆண்டுகளே.

CPS திட்ட நடைமுறையில் ஊழியருக்காக *35ஆண்டுகளும் மாதாமாதம் அரசுபெரும் தொகையைவழங்க வேண்டிய கட்டாயம்உள்ளது.

ஆனால்,

பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியரின்ஓய்வுக்காலத்திற்குப்பின்னான 10 - 15 ஆண்டுகள் நிதி*ஒதுக்கினாலே போதுமானது.

இவ்வாறு ஒதுக்கும் நிதியானது 7 ஊதியக்குழுக்களைகடந்துள்ள நிலையிலும்ஒட்டுமொத்த செலவினத்தில்14% மட்டுமே ஆகும்.

மேலும்,

NHIS உள்ளிட்ட திட்டங்களில் திருமணத்திற்குப் பின்ஊழியர்களின்
பெற்றோர்கள்அதன் பயன்களைத் துய்க்க இயலாதஅனாதைகளாக அரசே
கொள்கை வகுத்துள்ளது.

இந்நிலையில் CPS-ல் இருந்து ஓய்வுபெறும் ஒரு நபருக்கு,

*குடும்பநலநிதி*
*மருத்துவக் காப்பீடு*
*பணிக்கொடை*
*மாதாந்திர ஓய்வூதியம்*
*உள்ளிட்ட எதுவுமே இல்லாத சூழலில்*
அவரிடமிருந்து பிடித்த தொகையிலும்100%-தையும்பங்குச்சந்தையில் முதலீடு செய்வது என்பது,

இந்நாட்டில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் அதன்பின்உயிருடன் வாழத்தகுதியற்றோர் என்ற நிலையேஏற்பட்டுள்ளது.


இவ்வாறாகஅரசிற்கு நிதிச்சுமையையும் அரசுஊழியர்களுக்கு வாழ்நாள்
நெருக்கடியையும் தந்து கொண்டிருக்கும்,

CPS திட்டத்தை முற்றிலுமாகக் கைவிட்டுவிட்டு,

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதாஅவர்களின் தேர்தல்கால & சட்டசபைஅறிவிப்பின்படி,அரசின் நிதிச்சுமையை மேலும்அதிகரிக்கும்
படியாகத் தொடர்ந்து காலம் கடத்தாது

*அரசையும் அரசு ஊழியரையும் காக்கும் பழையஓய்வூதியத் திட்டத்தை உடனேநடைமுறைப்படுத்திடவேண்டும் .