ரயில் பயணங்களின் போது, டிக்கெட் பரிசோதகரிடம், அசல் ஆதார் அல்லது வாகன ஓட்டுனர் உரிமத்தை காண்பிக்க வேண்டிய அவசியம் இனி இல்லை. 'மத்திய அரசின், 'டிஜி லாக்கர் மொபைல் செயலி' மூலம் ஆவணங்களை காட்டினாலே போதுமானது' என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரயில் பயணங்களின் போது, டிக்கெட் பரிசோதகரிடம், அசல் ஆதார் அல்லது வாகன ஓட்டுனர் உரிமத்தை காண்பிக்க வேண்டிய அவசியம் இனி இல்லை.
'மத்திய அரசின், 'டிஜி லாக்கர் மொபைல் செயலி' மூலம் ஆவணங்களை காட்டினாலே போதுமானது' என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரயிலில் முன்பதிவு செய்த பெட்டிகளில் பயணம் செய்யும்போது, தங்களுடன், அசல் அடையாள அட்டை ஒன்றை, பயணியர் வைத்திருக்க வேண்டும் என்ற விதிஉள்ளது. ஆனால், பயணத்தின்போது, அசல் அடையாள அட்டை தொலைந்து விடுமோ என்ற பயம், பலருக்கும் உண்டு.
இந்நிலையில், பயணத்தின்போது ஆதார் அல்லது வாகன ஓட்டுனர் உரிமத்தை பயன்படுத்தும் பயணியர், இனி அதை எடுத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை. 'அரசு அடையாள அட்டைகளை டிஜிட்டல் வடிவில் பாதுகாக்கும், 'டிஜி லாக்கர்' என்ற மொபைல் செயலி மூலம், ஆதார் மற்றும் ஓட்டுனர் உரிமங்களை, டிக்கெட் பரிசோதகரிடம் காட்டினாலே போதும்' என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
பள்ளி, கல்லுாரி மதிப்பெண் பட்டியல், 'பான்' எனப்படும் வருமான வரி