தொழிற்கல்வி மாணவர் இன்ஜினியரிங் கவுன்சிலிங் அறிவிப்பு

இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கையில், தொழிற்கல்வி மாணவர்களுக்கான கவுன்சிலிங், வரும், 18ம் தேதி முதல், 20 வரை நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரி களில், பி.இ.,- - பி.டெக்., படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு, தமிழக அரசின் சார்பில், ஒற்றை சாளர கவுன்சிலிங் மற்றும் ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.இந்த ஆண்டு, கவுன்சிலிங்குக்கு விண்ணப்பித்த மாணவர்களில், விளையாட்டு பிரிவினர், சிறப்பு பிரிவினர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு, ஒற்றை சாளர கவுன்சிலிங், முதல் கட்டமாக முடிந்துள்ளது.



இரண்டாம் கட்டமாக, முன்னாள் ராணுவவீரர்களின் பிள்ளைகள் மற்றும் விளையாட்டு பிரிவினருக்கு, 16, 17ம் தேதிகளில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.இதை தொடர்ந்து, 'தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு, 18 முதல், 20 வரை, கவுன்சிலிங் நடத்தப்படும்' என, மாணவர் சேர்க்கை செயலர், ரைமண்ட் உத்தரியராஜ் அறிவித்துள்ளார்.


இது குறித்து, சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு, இ - மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ்., தகவல்கள் அனுப்பப்பட்டு உள்ளன.