நீட் எழுத கேரளா சென்ற தமிழக மாணவனின் தந்தை திடீர் மரணம்

நீட் தேர்வு எழுத மகனை எர்ணாகுளம் அழைத்துச்சென்ற திருத்துறைப்பூண்டிச் சேர்ந்த கிருஷ்ணசாமி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

எர்ணாகுளம்: தந்தை மரணமடைந்தது தெரியாமல் நீட் நுழைவு தேர்வு அவர் மகன் கஸ்தூரி மகாலிங்கம் எழுதி வருகிறார். நீட் தோவுக்கு மகனை எர்ணாகுளம் அழைத்துச் சென்ற தந்தை கிருஷ்ணசாமி மரணம் அடைந்துள்ளார்.
அவர் மகனை தேர்வு எழுத மையத்திற்கு அனுப்பிய பின் கிருஷ்ணசாமி மரணம் அடைந்தார்.திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்தவரான கிருஷ்ணசாமி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். தந்தை மாரடைப்பால் மரணமடைந்தது தெரியாமல் மகன் நீட் தேர்வு எழுதி வருகிறார்.

மாணவரின் தந்தை கிருஷ்ணசாமியின் உடலை தமிழகம் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்யவும், கிருஷ்ணசாமியின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை வழங்கவும் தலைமை செயலருக்கு முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.