பொறியியல் கல்லூரிகளுக்கான நுழைவு தேர்வு, தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு!!!

பெரம்பலூர்  மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும்
மாணவ -மாணவிகளில் 12ம் வகுப்பில் 30 மாணவ- மாணவிகளையும், 11 ஆம் வகுப்பில் 30மாணவ-மாணவிகளையும் தேர்வு செய்து சூப்பர் 30 என்ற பெயரில் சிறப்பு வகுப்புகள்நடத்தப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு வகுப்பில் பயிலும் மாணவ-மாண விகளுக்குநுழைவுத்தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகமும்,
திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து  பெரம்பலூர் அரசு
மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்பு பயிற்சியினை நடத்தி வருகின்றனர்.


அதனடிப்படையில் 2017-18ம் ஆண்டு கல்வியாண்டில் பெரம்பலூர் அரசு
மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வந்த சிறப்பு பயிற்சி வகுப்பில் பயிற்சி பெற்று வந்த நூத்தப்பூரை சேர்ந்த ராமையா என்பவரின் மகன் சிவக்குமார், அம்மாபாளையத்தை சேர்ந்த குமார் என்பவரது மகன் வல்லரசு ஆகியோர்  பொறியியல் படிப்புகளுக்கான
நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் நேற்று பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சாந்தாவை தேர்ச்சிபெற்ற மாணவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
My Blogger TricksAll Blogger TricksLatest Tips and Tricks