சாகர் புயலால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை: எஸ்.பாலச்சந்திரன்

சாகர் புயலால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
ஏடன் வளைகுடாவில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று சாகர் புயலாக வலுவடைந்துள்ளது.
தற்போது இந்தப் புயலானது ஏமன் கிழக்கே 400 கி.மீ., தூரத்தில் நிலைகொண்டுள்ளது. இது தொடர்ந்து மேற்கு திசையில், ஏமன் நோக்கி நகர்ந்து சொல்லக்கூடும்.
இந்தப் புயலால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. புயல் காரணமாக அந்த பகுதிக்கு மீனவர்கள் 2 நாட்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.