சம்பள முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட தனி நபர் குழுவுக்கு கோரிக்கை மனுக்கள் மே 15- க்குள் அனுப்பலாம்: தமிழக அரசு

அரசு ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை களைய, நிதித் துறையின் செலவின பிரிவு செயலர், சித்திக் தலைமையில், தனி நபர் குழுவை, தமிழக அரசு அமைத்துள்ளது.

இது குறித்து, தமிழக அரசு வெளியிட்டசெய்திக்குறிப்பு:அரசு ஊழியர்களின், சம்பள முரண்பாடுகளை சரி செய்ய, நிதித் துறையின் செலவின பிரிவு செயலர், சித்திக் தலைமையில், தனி நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு, சம்பள முரண்பாடு மற்றும் சம்பள திருத்தம் குறித்த மனுக்களை ஆய்வு செய்யும்.
மேலும், அரசு ஊழியர்கள் சங்கம் மற்றும்மனுதாரர்களின் கோரிக்கைகளை, தனியாககேட்பதற்கும் முடிவு செய்துள்ளது.அதனால், கோரிக்கை மனுக்களை, நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ, தனி நபர் குழுவுக்கு அனுப்பலாம். தவிர, omc_2018@tn.gov.in என்ற, இ - மெயில் முகவரிக்கு மே 15- க்குள் அனுப்ப வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.