உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அவகாசம் கேட்கும் ஆசிரியர் சங்கங்கள்

உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 15 மாணவர்களுக்கும் குறைவாக படிக்கும் வகுப்புக்களை கண்டறிய ஆசிரியர் சங்கங்கள் அவகாசம் கோரியுள்ளன.தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில்
ஆசிரியர் நியமனத்தை வரைமுறைப்படுத்த 15 மாணவர்களுக்கும் குறைவாக படிக்கும் வகுப்புக்களை கண்டறிந்து, அவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் இணைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடப்பதால் விபரங்களை சேகரிக்க கூடுதல் கால அவகாசம் வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.