நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கொள்கையில் மாற்றமில்லை - அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கொள்கையில் மாற்றமில்லை . நீட் தேர்வு பயிற்சி மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

பயிற்சி மையங்களில் தேர்வு செய்யப்படும் 2000 மாணவர்களுக்கு சென்னையில் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

சிறந்த மாணவர்களைத் தேர்வு செய்து அவர்களின் மதிப்பெண்களை மதிப்பீடு செய்கிறோம்; மாணவர்களுக்கு மொபைல் ஆப் மூலம் பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மத்திய அரசின் எந்தத் தேர்வையும் எதிர்கொள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்