தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் மழை காலங்களில் பாதிக்கப்பட்டு
வருகின்றனர். குறிப்பாக அதிகமாக மழை பெய்யும், மலை மாவட்டங்களில் மாணவ,
மாணவிகளுக்கு பாதிப்பு அதிகமாக இருப்பதாக தெரிகிறது. இதை தவிர்க்க
பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு ரெயின் கோட் வழங்க முடிவு
செய்யப்பட்டுள்ளது.
இந்த ரெயின் கோட் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, மதுரை, திருச்சி,
விழுப்புரம், திருநெல்வேலி, நாமக்கல், சேலம், தேனி, மதுரை, கிருஷ்ணகிரி,
தர்மபுரி மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை
தெரிவித்துள்ளது.