பத்தாம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு இன்று துவக்கம்

பத்தாம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு இன்று துவங்குகிறது.
தமிழகத்தில் பொது தேர்வை போல், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, அரையாண்டு தேர்வும், பொதுவான வினாத்தாளில் நடத்தப்படுகிறது. 



நடப்பு கல்வி ஆண்டில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, டிச., 7ல் அரையாண்டு தேர்வு துவங்கியது. இந்நிலையில், 10ம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு, இன்று துவங்க உள்ளது. மற்ற வகுப்புகளுக்கும், மாவட்ட வாரியாக, இன்று முதல் அரையாண்டு தேர்வும், இரண்டாம் பருவ தேர்வும் துவங்க உள்ளன. 
இந்த தேர்வுகள், வரும், 23ல் முடிகின்றன. பின், கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை முடிந்து, ஜன., 2ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.