சித்தா, ஆயுர்வேதம் படிப்புக்கு இன்று கவுன்சிலிங்

சென்னை: சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கான, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், இன்று(அக்.,11) துவங்குகிறது.


தமிழகத்தில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய முறை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி படிப்புகளுக்கு, ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், 396 இடங்கள்; 22 சுயநிதி கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டிற்கு, 600 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் சேர, 6,938 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

தரவரிசை பட்டியல், www.tnhealth.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கவுன்சிலிங், சென்னை, அரும்பாக்கம், சித்த மருத்துவக் கல்லுாரி வளாகத்தில், இன்று துவங்குகிறது; 14 வரை, கவுன்சிலிங் நடைபெறும்.

முதல் நாளில், சிறப்பு பிரிவினர் மற்றும் தரவரிசை பட்டியலில், 201 வரை இடம் பெற்றவர்கள் பங்கேற்க உள்ளனர். அழைப்பு கடிதத்தை, இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.