ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்துசெய்யப்படுமா என்பது குறித்து சமரசம் பேசிவருகிறோம். இது தொடர்பாக குழு அமைத்துபரிசீலனைக்குப் பின்னர் முடிவெடுக்கப்படும் எனபள்ளிக்கல்வித்துறை
அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளிகல்வித்துறையின்செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் கிருஷ்ணகிரிஅரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆட்சியர்கதிரவன் தலைமையில் நடந்தது. கல்வித்துறையினர்செயல்பாடுகளை ஆய்வு செய்த பள்ளிக்கல்வித்துறைஅமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:
தமிழகத்துக்கு நீட் தேர்வு விலக்கு அளிக்க வேண்டும்என்கிற கொள்கையில் தமிழக அரசு முனைப்புடன்செயல்படுகிறது. அதே வேளையில், மத்திய அரசுகொண்டு வந்துள்ள எந்த ஒரு பொதுத்தேர்வையும்மாணவர்கள் எதிர்கொள்ளும்வகையில், இம்மாதம்இறுதிக்குள் 412 பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்.இதற்காக, சென்னை தலைமையிடமாக கொண்டு பயிற்சிமையம் அமைக்கப்படும்.தமிழகத்தில் அனைத்துபள்ளிகளிலும் ரூ.60 கோடி மதிப்பில் ஸ்மார்ட் வகுப்புகள்அமைக்கப்படும். 9 முதல் 12-ம் வகுப்புகள் வரை ரூ.432கோடி மதிப்பில் கணினி மையமாக மாற்றப்படும்.முதுநிலை ஆசிரியர்கள் 3336 பேரும், 748 கணினிஆசிரியர்களும் பணியமர்த்தப்பட உள்ளனர். இவ்வாறுஅமைச்சர் தெரிவித்தார். ஜாக்டோ - ஜியோ போராட்டம்நடத்தி வருவது குறித்து கேட்டதற்கு, இதுபோன்றநிலைமைகள் வருகிற திங்கள்கிழமைக்கு மேல்இருக்காது என்றார்.
ஆசிரியர் தகுதித்தேர்வு
ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்துசெய்யப்படுமா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, இதில்வேறுபட்டகருத்துகள் உள்ளன. 2013-14-ம் ஆண்டில்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும், தற்போது தேர்வுஎழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கும் மதிப்பெண்களில்வித்தியாசம் உள்ளது. அப்போது 70 சதவீதம்மதிப்பெண்கள் பெற்றாலே, வாய்ப்பு அளிக்கப்பட்டது.தற்போது, 85 முதல் 95 சதவீதம் பெறுகிறார்கள்.வெயிட்டேஜ் என்கிற நிலை இருக்கிறது. அவர்களுடன்சமரசம் பேசிக்கொண்டிருக்கிறோம். ஒத்துழைப்புதந்தால், பழைய பாடத்தைப் படித்துவிட்டுகல்வியாளர்களாக இருக்கின்றவர்களின் எதிர்காலம்இல்லாத நிலையை மாற்றுவதற்கு ஒருகுழுவைஅமைத்து, அந்த குழுவின் மூலம் பரிசீலனை செய்துஇவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படுமா என்பதை அரசுபரிசீலிக்கும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.