ஜாக்டோ-ஜியோ அமைப்பு அறிவித்திருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதிய
ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கையை
வலியுறுத்தி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு
வருகின்றனர்.
இதனிடையே செப்.
7 ஆம் தேதி (வியாழக்கிழமை) முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில்
ஈடுபடுவது என திருநெல்வேலியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ
கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து
ஜாக்டோ-ஜியோ அமைப்பினருடன் அமைச்சர்கள் தரப்பில் பேச்சுவார்த்தை
நடத்தப்பட்டது. இதில் சுமூக முடிவு எட்டப்படாத நிலையில் முதல்வர் பழனிசாமி
ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில்
முதல்வர் ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையடுத்து அக்டோபர் 15- ம் தேதி வரை போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அந்த
அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
ஜாக்டோ-ஜியோ நிர்வாகி இளங்கோவன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
எனினும் ஒருசாரார் போராட்டம் ஒத்திவைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால் குழப்பம் நிலவிவருவதாகவும் கூறப்படுகிறது.
எனினும் ஒருசாரார் போராட்டம் ஒத்திவைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால் குழப்பம் நிலவிவருவதாகவும் கூறப்படுகிறது.