"தி இந்து" தலையங்கம்:: புதிய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெற முடியாதா?

தி இந்து:தலையங்கம்::

புதிய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெற முடியாதா??

Cps திட்டத்தில் உள்ள ஒவ்வொருவரும் கண்டிப்பாக படிக்க வேண்டியது
(CPS வரலாறு)

அரசு ஊழியர்கள்ஆசிரியர்கள் கோரிக்கையை ஏற்பதே சிறந்த தீர்வு
அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியமாக கடைசியாக அவர்கள்வாங்கும் சம்பளத்தில் பாதி கிடைத்துவந்ததுஅது மட்டுமல்லாமல்ஊழியர்இறந்துவிட்டால் அவரின் மனைவிக்கோ மகளுக்கோ அந்த ஓய்வூதியம்தொடர்வதாக 1957 முதல் நடைமுறையில் இருந்தது.

ஆனால்தற்போது ஊழியரின் சம்பளத்தில் 10 சதவீதத்தைப் பிடித்துஅதைபங்குச் சந்தையிலும் கடன்பத்திரங்களிலும் முதலீடு செய்துஅதன் பயனைஅவருக்குத் தருவதான புதிய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வந்தது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதை முக்கியமானகோரிக்கையாக வைத்துதமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டுநடவடிக்கைக் குழு (ஜேக்டோபோராடியதுஆனால்மாநில அமைச்சர் “மத்தியஅரசின் சட்டத்தின்படி உருவாக்கப்பட்டதால் புதிய ஓய்வூதியத் திட்டத்தைமாநில அரசால் திரும்பப் பெற முடியாதுஅது சாத்தியமில்லாத விஷயம்’’ என்றுவிளக்கியுள்ளார்அவரின் விளக்கம் சரியானதல்ல.

அமைச்சர்களின் உறுதிமொழி

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பிப்ரவரி 10-ம் தேதி முதல் வேலைநிறுத்தம்செய்யப்போவதாக அறிவித்தனர்அவர்களின் முக்கியமான கோரிக்கையும்இந்தப் புதிய ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதுதான்.

அமைச்சர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்முதலமைச்சரின் கவனத்துக்குகோரிக்கைகளைக் கொண்டுசெல்வதாகவும்நிதிநிலை அறிக்கை சமர்ப்பிப்பதற்காகக் கூடுகிற சட்டசபை கூட்டத்தொடரின்போது பிப்ரவரி 16-ம் தேதிஇதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்றும் உறுதியளித்தனர்ஆகவே,வேலைநிறுத்தத்தைக் கைவிடும்படி கேட்டுக்கொண்டனர்அமைச்சர்களின்உறுதிமொழியைச் சில சங்கங்கள் ஏற்றுக்கொண்டன.

ஆனால்தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் புதிய ஓய்வூதியத் திட்டம் திரும்பப்பெறப்படும் என்பதை எழுத்துபூர்வமான உடன்பாடாக ஏற்படுத்திக்கொள்ளலாம்என்று கேட்டுக்கொண்டதுஅப்படிச் செய்துகொண்டால்வேலைநிறுத்தமுடிவை மறுபரிசீலனை செய்வதாகத் தெரிவித்ததுஅரசு அதற்குச்செவிசாய்க்கவில்லைஅதனால் வேலைநிறுத்தம் நீடிக்கிறது.

எப்படி வந்தது?

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசாங்கம்தான் இதை முதலில்அறிவித்ததுதனது ஆட்சியின் கடைசி ஐந்து மாதங்களுக்கு முன்பாக ஒருநிர்வாக உத்தரவைப் போட்டதுஅதன் மூலம்தான் மத்திய அரசு ஊழியர்களுக்குபுதிய ஓய்வூதியத் திட்டம் 1.1.2004 முதல் அமலாகியது.

இதற்கான சட்டம் செப்டம்பர் 2013-ல்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு இந்தச் சட்டத்தைநிறை வேற்றியதுபாஜக இதை ஆதரித்ததில் ஆச்சரியமில்லை. 2014 பிப்ரவரி 1-ல்தான் இந்தச் சட்டம் அதிகாரபூர்வமாக அரசின் கெஜட்டில் அறிவிக்கப்பட்டது.

தமிழகம்தான் எல்லாவற்றிலும் முன்னோடி ஆயிற்றேஇந்தப் புதிய ஓய்வூதியம்மத்திய அரசு ஊழியர்களுக்கு அமலாக்கப்பட்டதற்கு ஒன்பது மாதங்களுக்குமுன்பாகவே

தமிழக அரசு ஊழியர்களுக்கு 1.4.2003 முதல் அப்போதைய அதிமுக அரசுஅமல்படுத்திவிட்டது. 6.8.2003-ல் அரசாணையும் வெளியிட்டதுஎனவே,தமிழக அரசு நினைத்தால் அதனைத் திரும்பப் பெறுவதில் எந்தத் தடையும்இல்லை.

ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையச் சட்டம் - 2013 (Pension Fund Regulatory and Development Authority Act - 2013) என்பதுமத்திய அரசின் சட்டத்துக்குப் பெயர்இந்தச் சட்டத்தின்3(4) வது பிரிவில், ‘எந்தமாநில அரசும் அல்லது எந்த யூனியன் பிரதேச நிர்வாகமும் ஒரு அறிவிக்கைமூலம் தேசிய ஓய்வூதியத் திட்டத்தை அதன் ஊழியர்களுக்கு விரிவுபடுத்தலாம்எனக் கூறப்பட்டுள்ளதுமேலும்இந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு தேசியஓய்வூதியத் திட்டம் என்று பெயர்எனவேமாநிலஅரசு விரும்பினால்தான்அந்ததேசிய ஓய்வூதியத் திட்டத்தைத் தன் ஊழியர்களுக்கு விரிவுபடுத்தலாம்.விரும்பாவிட்டால்தன் ஊழியர்களை பழைய ஓய்வூதியத் திட்டத்திலேயேவைத்துக்கொள்வதைச் சட்டம் எந்த வகையிலும் தடுக்கவில்லை.

எனவேஇந்தச் சட்டம் மத்திய அரசு ஊழியர்களுக்கு நேரடியாகப் பொருந்தும்.ஆனால்மாநில அரசு ஊழியர்களுக்கோ வேறு தனியார்பொதுத்துறைஅமைப்புகளுக்கோ நேரடியாகப் பொருந்தாதுகட்டுப்படுத்தாது என்பதுதான்உண்மையான நிலை.

தமிழகத்தால் முடியும்

பல மாநிலங்களில் நவம்பர் 2015 வரை 28 லட்சம் மாநில அரசு ஊழியர்கள்தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்மேற்குவங்கத்தில்திரிணமூல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பழைய ஓய்வூதியத் திட்டமே நீடிக்கிறது.திரிபுராவும் அப்படியேஇந்த மாநிலங்களில் பழைய திட்டம் தொடர்வதைமத்திய சட்டம் எந்த வகையிலும் தடுக்கவில்லை

எனவேதமிழக அரசு உண்மையாகவே விரும்பினால்ஒரு மறு அறிவிக்கையைவெளியிட்டுஅனைத்து அரசு ஊழியர்களையும்ஆசிரியர்களையும் பழையஓய்வூதியத் திட்டத்துக்குத் திரும்பக் கொண்டுவர முடியும்மொத்த அரசு ஊழியர்ஆசிரியர்கள் என்ணிக்கையில் 60% பேர் புதிய ஓய்வூதியத் திட்டத்தில்சேர்க்கப்பட்டுவிட்டனர்மீதியுள்ளோர் பழைய ஓய்வூதிய திட்டத்திலேயேநீடிக்கின்றனர்.

புதிய ஓய்வூதிய சட்டத்தில் இணைந்த ஊழியர்களின் பணம் ரூ.4,661 கோடி.அரசின் பங்களிப்பு ரூ.3,791 கோடிமொத்தம் ரூ.8452 கோடிஇந்ததொகையை மாநிலத்தை ஆண்ட திமுகஅதிமுக அரசுகள் ஓய்வூதிய நிதிஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்துக்கு பங்குச் சந்தையிலும் கடன்பத்திரங்களிலும் முதலீடு செய்ய கடந்த 12 ஆண்டுகளாகஅனுப்பிவைக்கவில்லைஇந்தக் காலத்தில் 3,404 பேர் ஓய்வுபெற்றுள்ளனர். 1,890 பேர் இறந்துள்ளனர்அவர்களுக்கு எந்தப் பணமும் தரப்படவில்லை.

விருப்பம் இல்லையா?

மத்திய அரசுக்கு அனுப்பிவைக்காத அந்தத் தொகை மாநில அரசின் கையில்இருக்கிறதுஅரசு விரும்பினால்தன் பங்களிப்புத் தொகையான ரூ.3,797கோடியை எடுத்துக்கொள்ளலாம்மீதியை அரசு ஊழியர்களின் சேமநல நிதியில்சேர்க்கலாம்.

புதிய ஓய்வூதியத்துக்கான சட்டம் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்குவந்தபோதுஇடதுசாரிகளுடன் இணைந்து அதிமுக நாடாளுமன்றஉறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தார்கள்திமுக உறுப்பினர்கள் ஆதரித்துவாக்களித்தனர்இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்வோம் என்று 2011சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரத்தின் கடைசி நாளன்று ஜெயலலிதாசென்னையில் அறிவித்தார்ஆனால்இப்போது அதிமுக அமைச்சர் ‘‘இது மத்தியசட்டம்அதனைத் திரும்பப் பெற மாநில அரசால் முடியாது’’ என்று கூறுவதுஇந்த விஷயத்தில் அரசுக்கு விருப்பம் இல்லை என்பதையே காட்டுகிறது.


சமீபத்தில் பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டது. 3 லட்சம் கோடி ரூபாய்களுக்கும்மேலான முதலீட்டாளர்களின் பணம் பறிபோனதுஇத்தகைய நிலையில்லாத,சூதாட்டம் போன்ற பங்குச் சந்தை விளையாட்டுகளில் ஊழியர்களின் வாழ்நாள்சேமிப்பைப் போட்டு அரசு விளையாட வேண்டாம் என்றுதான் அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள்அதைநிறைவேற்றுவதே சிறந்த தீர்வு.