அரசு ஊழியர் போராட்டமும் உயர்நீதிமன்ற தலையீடும்!* - ARTICLE

ஓய்வூதியம் என்பது மிக முக்கிய மான ஒரு கோரிக்கை. 30, 35 ஆண்டுகள்உழைத்த ஒருவர் வயதான காலத்தில் தனது குடும்பச் செலவையும்தனதுமருத்துவத் தேவை உட்பட அனைத் தையும் நிறைவேற்ற இருக்கிற ஒரே
வாய்ப்பு ஓய்வூதியம் தான்.
செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் அரசு ஊழியர்கள்ஆசிரியர்கள் காலவரையற்றவேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்இந்த வேலை நிறுத்தம் திடீரென்றுஏற்பட்டதல்லநீண்ட காலமாக அவர்கள் தங்களின் கோரிக்கைகளுக்காகபல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.

அவர்களது பிரதான கோரிக்கைகள் என்ன?

புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டுபழைய ஓய்வூதியத் திட்டத்தைஅமலாக்க வேண்டும்தொகுப்பூதியம்சிறப்பு காலமுறை ஊதியத்தில் உள்ளபல்லாயிரக்கணக்கான ஊழியர்களுக்கு முறையான காலமுறை ஊதியம்வழங்கப்பட வேண்டும்ஏழாவது சம்பளக் கமிசன் பரிந்துரைகள் அடிப்படையில்மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டதைப் போன்ற ஊதிய மாற்றம்ஏற்படுத்த வேண்டும் என்பவையேமேற்கண்ட கோரிக்கைகளுக்காக தமிழ்நாடுஅரசு ஊழியர் சங்கம் பலகட்டப் போராட்டங்களை நடத்தியதுஆசிரியர்அமைப்புகளும் தனித்தனியாகப் பலகட்டப் போராட்டங்களை நடத்தின.

அப்போதெல்லாம் தமிழக அரசு இக்கோரிக்கைகள் நியாயமில்லை என்றோ,ஏற்கத் தகுந்தது இல்லை என்றோசாத்தியமற்றது என்றோ கூறியது இல்லை. 2011 ...தி.மு..வின் தேர்தல் அறிக்கையில் கட்சியின் அப்போதையபொதுச் செயலாளர் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் தாங்கள்மீண்டும்ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டுபழையஓய்வூதியத் திட்டம் அமலாக்கப்படும் என்றும்தொகுப்பூதியம்மதிப்பூதியம்,சிறப்பு காலமுறை ஊதியம் போன்ற முறைகள் ஒழிக்கப்பட்டு முறையானகாலமுறை ஊதியம் வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார். 2011தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஜெயலலிதா முதலமைச்சராகபொறுப்பேற்றார்.

ஜெயலலிதா தனது தேர்தல் அறிக்கையில் கூறியபடி அரசு ஊழியர்களுக்குபழைய ஓய்வூதியத் திட்டம் மற்றும் காலமுறை ஊதியம் போன்ற வாக்குறுதிகளைஅமலாக்குவார் என்று பொறுமை காத்துஅரசுக்கு முறையீடுகளை அனுப்பிக்கொண்டே இருந்தனர். 5 ஆண்டுகள் பலகட்டப் போராட்டங்களை நடத்திஅரசின் கவனத்தை ஈர்க்க முயன்றனர்.

பலன் கிடைக்கவில்லைஆட்சியினர் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டுதாங்கள் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளையே அமலாக்கமறுத்தனர்இந்நிலையில் தான் 5 ஆண்டுகள் பொறுமை காத்த அரசு ஊழியர்கள்ஆட்சியின் காலம் முடிவடையும் நிலையில் தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டதைஉணர்ந்து 2016 பிப்ரவரியில் காலவரையற்ற போராட்டதை நடத்தினர்.

10 நாட்கள் வேலை நிறுத்தம் நடந்த பின்னர் தான் அரசு இறங்கி வந்தது.தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதற்போதைய துணைமுதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 5 அமைச்சர்கள் கொண்டக் குழுவினர்முதலைமைச்சர் உத்தரவின் பேரில் சங்கப் பிரதிநிதிகளோடு பேச்சுவார்த்தைநடத்தினர்.

உறுதியான அறிவிப்புகள் இல்லாமல் வேலைநிறுத்தப் போராட்டம்முடிவடையாது என்ற நிலையை உணர்ந்தமுதலமைச்சர் ஜெயலலிதா19.02.2016 இல் விதி எண் 110 ன் கீழ் 11அறிவிப்புகளை சட்டமன்றத்தில்வெளியிட்டார்அந்த அறிவிப்புகளில் புதிய ஓய்வூதியத் திட்டம் திரும்பப்பெறும் வழிமுறைகளை ஆய்வு செய்ய வல்லுநர் குழு அமைக்கப்பட்டு,அவர்களது அறிக்கையைப் பெற்ற பின்னர் பழைய ஓய்வூதியத் திட்டம்அமலாக்கப்படும் என்றும்காலமுறை ஊதியம் வழங்குவது குறித்தநடைமுறைகள் குறித்து வல்லுநர்குழு அமைக்கப்பட்டுஅதன் பரிந்துரையைப்பெற்று அமலாக்கப்படும் என்றும் பல அறிவிப்புகளை அறிவித்தஅடிப்படையில் அந்த காலவரையற்ற வேலை நிறுத்தம் விலக்கிக்கொள்ளப்பட்டதுஆனால் இந்த அறிவிப்புகள் அனைத்தும் இதுவரை அமலுக்குவரவில்லை.

ஓய்வூதியத்துக்காக வல்லுநர் குழு அமைக்கப்பட்டு ஒன்றே முக்கால்வருடங்கள்கடந்து விட்டனவல்லுநர் குழு அறிக்கை பெறப்படாமலேயே அக்குழு மட்டுமேமாற்றி அமைக்கப்படுகிறதுஎனவே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால்கொள்கை அளவில் ஏற்கப்பட்டு அறிவிக்கப்பட்ட கோரிக்கைகளை அம்மா அரசுஎன்று அறிவித்துக் கொள்ளும் அதிமுக அரசு செயல்படுத்த மறுத்து,ஏமாற்றுவதாலேயே அவர்கள் வேறு வழியின்றி வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வேலை நிறுத்தத்திற்கு முன்னர் வட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்,மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்கோட்டை நோக்கி பேரணிஒருநாள்வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல கட்டப் போராட்டங்களை நடத்தியும் இந்தஅரசு வஞ்சக நாடகம் ஆடுவதை உணர்ந்ததால் தான் தங்களது நியாயமானகோரிக்கைகளுக்காக காலவரையற்ற வேலை நிறுத்தம் என்ற முடிவைஎடுக்கின்ற கட்டாயத்துக்கு அரசால் தள்ளப்பட்டனர்ஓய்வூதியம் என்பது மிகமுக்கியமான ஒரு கோரிக்கை.

30, 35 ஆண்டுகள் உழைத்த ஒருவர் வயதான காலத்தில் தனது குடும்பச்செலவையும்தனது மருத்துவத் தேவை உட்பட அனைத்தையும் நிறைவேற்றஇருக்கிற ஒரே வாய்ப்பு ஓய்வூதியம் தான்நாடாளுமன்றத்தில் புதிய ஓய்வூதியத்திட்டத்துக்கான மசோதா வந்த போது எதிர்த்து வாக்களித்தது அதிமுக.ஜெயலலிதா அத்திட்டத்தை நிராகரித்தார்.

ஆனால் தமிழகத்தில் அத்திட்டம் 1.1.2003 முதல் அமலாக்கப்படுகிறது.இதற்காக 1.4.2003 முதல் நியமனம் செய்யப்பட்ட 4,70,859 அரசு ஊழியர்கள்ஆசிரியர்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுமாதாமாதம் அவர்களது சம்பளத்திலிருந்து பிடிக்கப்பட்ட ரூ.18,000 கோடி பணம்எந்த தனி கணக்கிலும் பராமரிக்கப்படவில்லை.

அப்பணம் என்னாயிற்று என்பதே தெரியவில்லைஏற்கெனவே மிகப் பெரும்கடன் சுமையில் இருப்பதாகக் கூறும் தமிழக அரசு அதையும்செலவழித்துவிட்டதோ என்ற கவலையும் நியாயமானதேபோக்குவரத்துக்கழகங்களில் இந்த நிலையைத் தான் ஓய்வூதியர்கள் அனுபவித்து வருகின்றனர்என்பது குறிப்பிடத்தக்கதுஎனவே ஏமாற்றப்பட்டுவஞ்சிக்கப்பட்ட நிலையில்தான் அரசு ஊழியர்கள் வேறு வழியின்றி இந்த போராட்டத்தில் தள்ளிவிடப்
பட்டுள்ளனர்.

வேலை நிறுத்தத்திற்கு தமிழக அரசு தான் பொறுப்பே தவிர அரசு ஊழியர்கள்மற்றும் ஆசிரியர்கள் அல்லமேலும் தமிழக அரசு நம்பிக்கையிழந்த அரசாகஉள்ளதுநீட் வராதுவராது என்று தொடர்ந்து தமிழக அரசு கூறிய நிலையில்அதை நம்பியிருந்த தமிழக மாணவர்கள் ஏமாற்றப்பட்டனர்அதனால்மனமுடைந்த மாணவி அனிதாவின் மரணம் அனைவரையும் அதிர்ச்சிக்குஉள்ளாக்கியது.

ஒவ்வொரு விஷயத்திலும் அரசு மக்களை ஏமாற்றும் நிலையில் அரசு ஊழியர்கள்வேறு வழியில்லாமல் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்இந்நிலையில்தான் மதுரையைச் சார்ந்த ஒருவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்அரசு ஊழியர்ஆசிரியர் போராட்டத்துக்கு தடை பெற்றுள்ளார்அவரதுஅரசியல் பின்னணி என்னஅவரது நோக்கம் என்ன?என்பது தெரியவில்லை.கட்டாயம் அவருக்கு ஒரு அரசியல் நோக்கம் இருந்திருக்கும்அவர்தனிப்பட்டமுறையில் பாதிக்கப்பட்டவரல்ல.

பொது நலன் என்ற பெயரில் அவர் தனது அரசியல் நோக்கத்துக்கு நீதிமன்றத்தைபயன்படுத்தி உள்ளார்பொது மக்களில் அரசு ஊழியர்கள்ஆசிரியர்கள்இல்லையாஅவர்கள் 5 ஆண்டுகளுக்கு மேலாக அரசால்ஏமாற்றப்பட்டுள்ளனர்கொள்கை அளவில் ஏற்கப்பட்டுஅரசால்சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டதை அமலாக்கவே இந்த போராட்டம்இதுதிடீரென்று அறிவிக்கப்பட்டு நடக்கும் வேலை நிறுத்தம் அல்லபோராடும் அரசுஊழியர்கள் தரப்பை கேட்காமலேயே நீதிமன்றம் தடை விதிப்பதும்பின்னர்நீதிமன்ற அவமதிப்பு என்பதும் மறுக்கப்பட்ட நீதியாகாதாநம்பகத் தன்மையைஇழந்த மாநில அரசு.

நீதிமன்றம் பல தடவை உத்தரவிட்டும் உள்ளாட்சி தேர்தல் தேதிக்கான கெடுவிதித்தும் இதுவரை நீதிமன்ற தீர்ப்பை அமலாக்கியதாமக்களை மட்டுமல்ல,நீதிமன்றத்தையே மதிக்காத அரசு என்பதற்கு பல உதாரணங்களை கூற இயலும்.இந்நிலையில்தான் நீதிமன்றம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின்உணர்வுகளையும் நியாயத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்இந்தபோராட்டத்திற்கு அரசே பொறுப்பு என்பதை மக்கள் புரிந்துள்ளனர்.

வேலை நிறுத்தப் போராட்டம் என்பது பொழுது போக்குக்கான நிகழ்வல்லஇதுதன்னை வருத்தி செய்யப்படும் ஒரு வேள்விவேறு வழியின்றி இந்தபோராட்டம் நடக்கிறது பல லட்சம் அரசு ஊழியர்கள்ஆசிரியர்கள்இவ்வேள்வியில் தங்களை ஈடுபடுத்தியுள்ளனர்அனைத்துத் தரப்பினரும்அவர்கள்பால் உள்ள நியாயத்தை புரிந்து நியாயமான கோரிக்கைகளைநிறைவேற்ற அரசை நிர்ப்பந்திக்க முன் வரவேண்டும்.