ஸ்காலர்ஷிப்' பெற நவ., 4 ல் திறனறி தேர்வு

மத்திய அரசின் உதவித்தொகை பெறுவதற்கான, தேசிய திறனறித் தேர்வு, நவ., ௪ல் நடக்கிறது.பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், பிளஸ் ௧ முதல், ஆராய்ச்சி படிப்பு வரை படிக்க, மத்திய அரசு கல்வி உதவித்தொகை வழங்குகிறது.
இதற்கு, மாநில மற்றும் தேசிய அளவில், இரண்டு கட்டத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மாநில தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டும், தேசிய தேர்வில் பங்கேற்கலாம். பள்ளிகளில், இதற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.'இந்தாண்டுக்கான, மாநில அளவிலானதேசிய திறனறித் தேர்வு, நவ., ௪ல் துவங்கும்' என, தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி தெரிவித்து உள்ளார்