தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று நிறைவு

சென்னை : தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. சட்டசபையில் கொண்டுவரப்பட்ட முக்கிய மசோதாக்கள் இன்று
நிறைவேற்றப்பட உள்ளன.தமிழக சட்டப்சபை கூட்டத் தொடர் ஜூன் மாதம் 14ஆம் தேதி தொடங்கியது. பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெற்றபின், முக்கிய அறிவிப்புகளை அமைச்சர்கள் வெளியிட்டனர். இந்நிலையில், சட்டப்பேரவையில் நேற்று ஒரே நாளில் 8 மசோதாக்கள் கொண்டுவரப்பட்டன. தமிழக மின்தூக்கிகள் சட்டம், ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப் புள்ளிகள் சட்டம், உடல் ஊனமுற்றோரின் உரிமைகள் சட்டம், மீனவர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையிலான திருத்தச் சட்டம் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டன. இவை அனைத்தும் இன்று ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, நிறைவேற்றப்பட உள்ளன.கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று ஒரே நாளில் 25 மசோதாக்களை நிறைவேற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.