ஆசிரியர் இடமாறுதலில் பல கோடி ஊழல்! அன்புமணி குற்றச்சாட்டு

ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தாமல் பணியிட மாறுதல்வழங்கி பெரும் ஊழல் நடந்திருப்பதாகவும்பணியிட மாறுதலுக்குபதவி
நிலைக்கு ஏற்றவாறு ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரைகையூட்டாக வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.  ஒருமாறுதலுக்கு சராசரியாக ரூ.4 லட்சம்  என வைத்துக் கொண்டாலும்ஒட்டுமொத்தமாக ரூ.118 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருக்கலாம்என்று பா..இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ்குற்றம் சாட்டியுள்ளார்.



இது தொடர்பாக அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அத்திப் பழத்தைப் பிட்டுப் பார்த்தால் அத்தனையும் சொத்தைஎன்பதைப் போலபினாமி எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலானஆட்சியில் எந்த அமைச்சகமுமே ஊழலுக்கு அப்பாற்பட்டதாகஇருக்காது போலிருக்கிறதுஓரளவு நேர்மையாகவும்,திறமையாகவும் செயல்படும் அமைச்சகம் என்ற பெயரைப்பெற்றிருந்த பள்ளிக்கல்வித் துறையிலும் பல கோடி ஊழல்நடந்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

தமிழகத்தில் அண்மையில் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்குஆசிரியர்களை இடமாறுதல் செய்வதில் தான் பெருமளவில் ஊழல்நடைபெற்றிருப்பதாக தெரியவந்துள்ளதுதமிழகசட்டப்பேரவையில் கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்ட 2017-18 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் 100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாகவும், 150 நடுநிலைப் பள்ளிகள்உயர்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் என்றுஅறிவிக்கப்பட்டதுதரம் உயர்த்தப்படும் 100 மேல்நிலைப்பள்ளிகளில் தலா 9 ஆசிரியர்கள் வீதம் 900 முதுநிலைபட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், 150 உயர்நிலைப்பள்ளிகளுக்கு  தலா 5 ஆசிரியர்கள் வீதம் 750 பட்டதாரி ஆசிரியர்பணியிடங்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

புதிதாக உருவாக்கப்பட்ட பணியிடங்களை உடனடியாக நிரப்பமுடியாது என்பதால் பிற பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களைகலந்தாய்வு முறையில் இடமாற்றம் செய்து தான் இந்த தரம்உயர்த்தப்பட்ட பள்ளிகளை நடத்த முடியும்அந்த வகையில்பார்த்தால் 100 மேல்நிலைப் பள்ளிகளில் 900 முதுநிலைப் பட்டதாரிஆசிரியர்கள், 100 தலைமையாசிரியர்கள்  என 1000 பேரும், 150 உயர்நிலைப்பள்ளிகளில்  750 பட்டதாரி ஆசிரியர்கள், 150 தலைமையாசிரியர்கள்ஏற்கனவே நிரப்பப்படாமல் காலியாகஇருக்கும் 900 தலைமையாசிரியர் பணியிடங்கள் என 1800 பேரும்இடமாறுதல் கலந்தாய்வு மூலம் புதிதாக உருவாக்கப்பட்டபணியிடங்களில் அமர்த்தப்பட வேண்டும்அதுமட்டுமின்றி,உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட 150 நடுநிலைப்பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்து வரையிலான வகுப்புகள்தனியாக பிரிக்கப்பட்டு தொடக்கப்பள்ளிகளாக மாற்றப்படும்இந்தபள்ளிகளுக்கு 150 தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்பணியிடங்கள் உருவாக்கப்பட்டு அவையும் கலந்தாய்வு மூலம்நிரப்பப்பட வேண்டும்மொத்தம் 2950 ஆசிரியர் பணியிடங்களைநிரப்புவதற்கு  இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும்.

ஆனால்இவற்றில் நீதிமன்ற வழக்கு காரணமாகஉயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் தவிரமீதமுள்ள 1900 பணியிடங்களையும் நிர்வாக மாறுதல் மூலம் நிரப்பபள்ளிக்கல்வித்துறை முடிவு செய்திருப்பதாகவும்அதற்கானபணியிட மாறுதல் ஆணைகள் தயாராகி விட்டதாகவும்கூறப்படுகிறது.  உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்பணியிடத்திற்கும் ஆட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்வெகுவிரைவில் நீதிமன்றத் தடை நீக்கப்பட்டு அவர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்படும்  என்று கூறப்படுகிறதுஇதுநடந்தால் பள்ளிக்கல்வித்துறையின் மிகப்பெரிய ஊழலாகஇருக்கும்.

கலந்தாய்வு முறையில் பணியிட மாறுதல் வழங்கப்படும் போதுஅது வெளிப்படையான முறையில் தேவையானவர்களுக்கு மட்டும்கிடைக்கும்குடும்பத்தைப் பிரிந்து வெகு தொலைவில்பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சொந்த மாவட்டத்திலோஅல்லதுஅதற்கு அருகிலுள்ள மாவட்டத்திலோ மாறுதல் கிடைக்கும்இடமாறுதலுக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருப்போருக்கு கிடைக்கும்அரிய வாய்ப்பு இதுவாகும்ஆனால்நிர்வாக மாறுதல் முறையில்ஆட்சியாளர்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் மற்றும் கத்தைக்கத்தையாக பணம் கொடுப்பவர்களுக்கு அவர்கள் விரும்பும்இடத்திற்கு மாறுதல் வழங்கப்படும்அவர்களுக்கு வழங்கப்பட்டதுபோக மீதம் ஏதேனும் இருந்தால் பிறருக்கு வழங்கப்படும்

ஒவ்வொரு ஆண்டும் பொது இட மாறுதல் கலந்தாய்வுநடைபெறுவது வழக்கம்கடந்த மே மாதம் நடந்தக் கலந்தாய்வுமிகவும் வெளிப்படையாக நடைபெற்றதுஅதில் எந்த முறைகேடும்நடக்கவில்லைஆனால்இப்போது பணியிட மாறுதலுக்கு பதவிநிலைக்கு ஏற்றவாறு ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரைகையூட்டாக வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.  ஒருமாறுதலுக்கு சராசரியாக ரூ.4 லட்சம்  என வைத்துக் கொண்டாலும்ஒட்டுமொத்தமாக ரூ.118 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருக்கலாம்பள்ளிக்கல்வித்துறை செயலாளராக உதயச் சந்திரன் பொறுப்பேற்றபிறகு அத்துறையில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லைஅனைத்தும் சட்டப்படி நடைபெற்று வந்தது மிகவும் மனநிறைவாகஇருந்ததுஆனால்இப்போது அத்துறையிலேயே ஊழல்நடந்திருப்பதாக குற்றச்சாற்றுகள் எழுவது அதிர்ச்சியளிக்கிறது.


எனவேதரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கான ஆசிரியர்பணியிடமாற்ற ஆணைகளை இரத்து செய்ய வேண்டும்அதற்குபதிலாக கலந்தாய்வு நடத்தி அதனடிப்படையில் இடமாறுதல்ஆணைகளை வழங்க வேண்டும்அதுமட்டுமின்றி இந்த சிக்கல்குறித்து விசாரணைக்கும் ஆணையிட வேண்டும்இவ்வாறுகூறியுள்ளார்.