'குரூப் - ௪ பதவிக்கான கவுன்சிலிங், 17ம் தேதி முதல் நடக்கும்' என, தமிழ்
நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
தமிழக அரசு துறையில், குரூப் - 4 பிரிவில், இளநிலை உதவியாளர் பதவிக்கு,
நேரடி நியமனம் செய்ய, எழுத்துத் தேர்வு, 2016 நவம்பரில் நடந்தது;
முடிவுகள், ௨௦௧௭ பிப்ரவரியில் வெளியிடப்பட்டன.
இதில், இளநிலை உதவியாளர் பதவிக்கு, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, ஜூலை 17 -
ஆக., 8 வரை, முதற்கட்ட கவுன்சிலிங் நடக்கிறது. கூடுதல் விபரங் களை,
டி.என்.பி.எஸ்.சி.,யின், www.tnpsc.gov.in இணையதளத்தில் அறியலாம்.