அண்ணா பல்கலை இன்ஜி., கவுன்சிலிங் ‘ரேண்டம்’ : எண் நாளை வெளியீடு !!!

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 550க்கும் மேற்பட்ட இன்ஜி.,
கல்லுாரிகளில், பி.., – பி.டெக்., படிப்பில் சேர, ஒற்றை சாளர கவுன்சிலிங் மூலம், மாணவர் சேர்க்கை நடக்கிறது.
இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்க, மே, 1 முதல், 31 வரை விண்ணப்ப பதிவு நடந்தது. இதில், 1.68 லட்சம் பேர், ஆன்லைனில் பதிவு செய்தனர். அவர்களில், 1.40 லட்சம் பேர், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பல்கலைக்கு அனுப்பி உள்ளனர்.
இவர்களுக்கான, தரவரிசையை முடிவு செய்வதற்கான, ‘ரேண்டம்எண், நாளை வெளியாகிறது. ஒவ்வொரு மாணவருக்கும், ‘ரேண்டம்எண் உருவாக்கப்படும். அதை, இணையதளத்தில் மாணவர்கள் பார்க்கலாம்.

ஒரே மாதிரியாக, ‘கட் ஆப்பெறும் மாணவர்களில், யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்பது குறித்து, ‘ரேண்டம்எண் மூலம் முடிவு செய்யப்படும்.