கல்வி கட்டணம்: விபரம் கேட்கும் சி.பி.எஸ்.இ.,

கட்டண வசூல் விபரங்களை தாக்கல் செய்யும்படி, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, வாரியம்
உத்தரவிட்டுள்ளது. சி.பி.எஸ்.இ., என்ற, மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் இயங்கும், பள்ளிகள் தாங்களாகவே, கல்வி கட்டணம் நிர்ணயித்து கொள்கின்றன. பல
பள்ளிகள் அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூலிப்பதாக, சி.பி.எஸ்.இ.,க்கு புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து, அனைத்து, சி.பி.எஸ்.இ., பள்ளிகளும், தங்களின் கல்வி கட்டண விபரங்களை சமர்ப்பிக்கும்படி, சி.பி.எஸ்.இ., அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.