'அதிகாரிகளை நானே நேரடியாக கண்காணிக்கிறேன்... ஜாக்கிரதை!' -கல்வித் துறை செயலர் உதயசந்திரன் எச்சரிக்கை

அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் சார்பில், முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான, திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம், மதுரையில் நடந்தது. அதில், கல்வித் துறை செயலர் உதயசந்திரன் பேசும்போது, 
' மாணவர்கள் போல், சி.இ.ஓ., - டி.இ.ஓ.,க்களும் சுதந்திரமாக செயல்படலாம்; சர்வாதிகாரத்துடன் செயல்படக் கூடாது. அதிகாரிகளை தலைமை செயலகத்தில் இருந்து, 'இரண்டு கண்கள்' எப்போதும் கண்காணித்து கொண்டிருக்கும். தவறு செய்தால் நிச்சயம் தண்டனை உண்டு' என்றார்.
கூட்டத்தில் பங்கேற்ற, 'கை சுத்தம்' உள்ள அதிகாரிகள் சிலர், 'கல்வித்துறையின் மானம் காற்றில் பறக்கும் அளவிற்கு இதுவரை தவறு செய்த அதிகாரிகள், இனிமேலாவது திருந்துங்கள். 'உங்களை நானே நேரடியாக கண்காணிக்கிறேன்; ஜாக்கிரதை...' என, இதம், பதமாக எச்சரிக்கை விடுத்திருக்காரே, சபாஷ்' என்றனர்.