சி-டெட் தேர்வு இனி ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே

ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் சி.டெட் தேர்வை, இனி
ஆண்டுக்கு ஒருமுறை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய ஆசிரியர் நியமன தகுதிக்கான தேர்வை(சி-டெட்) சி.பி.எஸ்.., அமைப்பு ஆண்டுக்கு இருமுறை நடத்தி வந்தது. இந்நிலையில், ஜே...,மெயின் தேர்வு, நீட் தேர்வு, மருத்துவ படிப்புகளுக்கான தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை நடத்த வேண்டியுள்ளதால், அதிக பணிச்சுமை ஏற்பட்டிருப்பதாகவும், எனவே சி-டெட் தேர்வினை இனி ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தவும் சி.பி.எஸ்.., அமைப்பு முடிவு செய்துள்ளது. இதனை மத்திய மேம்பாட்டு அமைச்சகத்திடமும் சி.பி.எஸ்.., அமைப்பு தெரிவித்துள்ளது