10, +2 பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிப்பதில் இனி ரேங்க் முறை இல்லை - பள்ளிக்கல்வித்துறை முடிவு

12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரேங்க் முறை அறிவிப்பதில் மாற்றம் கொண்டுவர பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி மாநில அளவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படாது. 
இதுகுறித்து முறையான அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிபிஎஸ்இ அறிவிக்கும் முறையை போல் மாநில அரசு கடைபிடிக்க வாய்ப்பு உள்ளது.