அரசு வேலை வாய்ப்புக்காக81.30 லட்சம் பேர் காத்திருப்பு

சென்னை, தமிழகம் முழுவதும் உள்ள, வேலை வாய்ப்பு அலுவலகங்களில், 81.30 லட்சம் பேர், வேலைக்காக தங்கள் பெயரை, பதிவு செய்துள்ளனர்.தமிழகத்தில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்களில், மார்ச் மாதம் வரை பதிவு செய்துள்ளோரின் விபரங்களை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது.



இதன்படி, 81.30 லட்சம் பேர், அரசு வேலைக்காக தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர்.இதில், பத்தாம் வகுப்புக்கு கீழ் படித்தோர், 4.26 லட்சம்; பத்தாம் வகுப்பு படித்தோர், 59.02 லட்சம்; பிளஸ் 2 முடித்தோர், 36.52 லட்சம்; பொறியியல் டிப்ளமோ முடித்தோர், 3.21 லட்சம்; பிற டிப்ளமோ முடிந்தோர், 92 ஆயிரத்து, 948 பேர் உள்ளனர். மேலும், இளநிலை பட்டதாரிகள், 82 ஆயிரத்து, 921 பேர்; முதுநிலை பட்டதாரிகள், 2.23 லட்சம் பேரும், தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர்.அதிபட்சமாக, வேலுார் மாவட்டத்தில், 3.69 லட்சம் பேர், விழுப்புரம் மாவட்டத்தில், 3.50 லட்சம் பேர்; சேலம் மாவட்டத்தி