11.35 லட்சம் பேர் விண்ணப்பம்: தமிழகத்தில் கூடுதலாக 3 நகரங்களில் நீட் தேர்வு

மாணவ–மாணவிகள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கு தேசிய 
தகுதி மற்றும் நுழைவுத்தேர்வுக்கு (நீட் தேர்வு) கடந்த வருடம் 
இந்தியா முழுவதும் 8 லட்சத்து 2 ஆயிரத்து 594 பேர் விண்ணப்பித்தனர். 
ஆனால் இந்த வருடம் 11 லட்சத்து 35 ஆயிரத்து 104 பேர் 
விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த வருடத்தை விட 41.42 சதவீதம் 
அதிகம். நீட் தேர்வு மே மாதம் 7–ந் தேதி நடைபெற உள்ளது.

தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி ஆகிய
 நகரங்களில் மட்டும் தேர்வு நடைபெற இருந்தது. தற்போது 
திருநெல்வேலி, நாமக்கல், வேலூர் ஆகிய 3 இடங்கள் 
அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்தம் 103 நகரங்களில் 
தேர்வு நடைபெறுகிறது.