'கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் முழுமையாக செயல்படுத்தப்படுகிறது'-ஆளுநர் வித்யாசாகர் ராவ்

ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் குழந்தைகளுக்கான இலவச, கட்டாயக் கல்விச் சட்டம் தமிழகத்தில் முழுமையாக செயல்படுத்தப்படுகிறது என ஆளுநர் வித்யாசாகர் ராவ் பெருமித்துடன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்தும் நோக்கில் அரசு பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. தேவையான வகுப்பறைகள், அறிவியல் ஆய்வுக் கூடங்கள், நூலகங்கள், கழிப்பறைகள் நிறுவப்பட்டு வருகின்றன.
சமூகப் பொருளாதார நிலையில் நலிவடைந்த குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகள் பயன் பெறும் வகையில், குழந்தைகளுக்கான இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை தமிழக அரசு முழுமையாகச் செயல்படுத்தி வருகிறது என ஆளுநர் கூறியுள்ளார்.