டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு விண்ணப்பம் வினியோகம்

பிளஸ் 2 முடித்தோர், 'டிப்ளமோ இன் பார்மசி' படிப்புகளில் சேர முடியும்.
மூன்று அரசு கல்லுாரிகளில், 240 இடங்கள் உள்ளன

டிப்ளமோ இன் பார்மசி முடித்தோர், பி.பார்ம்., படிப்பில், நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரலாம். இதற்கு, இரண்டு அரசு கல்லுாரிகளில், 12ம்; 30 சுயநிதி கல்லுாரிகளில், 184 இடங்களும் உள்ளன.
'டிப்ளமோ இன் நர்சிங்' முடித்தோர், 'போஸ்ட் பேசிக் பி.எஸ்சி.,' படிப்பில் சேரலாம். இதற்கு, இரண்டு அரசு கல்லுாரிகளில், 90ம்; 50 சுயநிதி கல்லுாரிகளில், 1,023 இடங்களும் உள்ளன.
இந்த, மூன்று படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், www.tnhealth.org என்ற
இணையதளத்தில் நேற்று துவங்கியது. ஜூலை, 21 வரை பதிவிறக்கம் செய்யலாம்; பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, ஜூலை, 22க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.