டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

தமிழக அரசின்கீழ் செயல்படும் ‘எல்காட்’ நிறுவனத்தில் காலியாக உள்ள துணை மேலாளர் பணிக்கான
அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
வயது வரம்பு:18 முதல் 30. வயது வரம்பு சலுகையும் உண்டு.
தகுதிகள்:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரியில்இளநிலை பொறியியல் பட்டப் படிப்பில் எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன், இன்பர்மேஷன் டெக்னாலஜி அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்று பணி அனுபவமும் பெற்றிருப்பது அவசியம்.
தேர்வு முறை:எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:மே 10
மேலும் விவரங்களுக்கு: www.tnpsc.gov.in