தேர்வறை கண்காணிப்பாளர் நியமனம்; இந்தாண்டும் குலுக்கல் முறை

உடுமலை: பிளஸ் 2 பொதுத்தேர்வுக்குதேர்வறை கண்காணிப் பாளர்களை நியமிப்பதில்நடப்பாண்டிலும் குலுக்கல் முறையே பின்பற்றப்படுவதாககல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களை கண்காணிக்கஒவ்வொரு தேர்வு மையங்களிலும்தேர்வறை கண்காணிப்பாளர்கள்முதன்மை கண்காணிப்பாளர்கள்துறை அலுவலர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
தலைமையாசிரியர்கள்முதன்மை கண்காணிப்பாளர்கள்துறை அலுவலர்களாகவும்ஆசிரியர்கள் தேர்வறை கண்காணிப்பாளர்களாகவும் நியமிக்கப்படுகின்றனர். தேர்வறை கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்படும் ஆசிரியர்களைசரியான சாலை வசதியில்லாத தொலைதுார மையங்களில் நியமிப்பதாக புகார்கள் எழுந்தன.
இதனால்தேர்வறை கண்காணிப்பாளர் பணிக்கு நியமிக்கப்பட்ட பின்னரும்ஆசிரியர்கள் அப்பணியிலிருந்து பின் வாங்குகின்றனர். இந்நிலையை தடுக்கும் வகையில்குலுக்கல் முறையில் தேர்வறை கண்காணிப்பாளர்களை தேர்வு செய்யும் முறைகடந்தாண்டு பின்பற்றப்பட்டது.
பள்ளி நிர்வாகத்தினரேஆசிரியர்களை தேர்வு செய்துஅவர்களின் பெயர்களை சீட்டுகளில் எழுதி,மாவட்ட கல்வித்துறையில் சமர்ப்பிக்கின்றனர். மாவட்ட கல்வித்துறை அலுவலகத்தில் நடக்கும் தலைமையாசிரியர்கள் கூட்டத்தில்குலுக்கல் முறையில்ஒவ்வொரு ஆசிரியரும் தேர்வறை கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்படுகின்றனர்.
இந்த முறைபொது தேர்வறையில் நாற்காலி வசதி கிடையாது என கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனால்நீண்ட நேரம் நிற்க முடியாதஉடல் நலம் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி ஆசிரியர்களின் பெயர்களைகுலுக்கல் பட்டியலில் சேர்க்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுளது.