வெள்ள பகுதிகளில்இலவச வாக்காளர் அட்டை

சென்னை: 'வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாக்காளர்களுக்கு, இலவசமாக புதிய அடையாள அட்டை வழங்கப்படும்' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.அவர் கூறியதாவது:வெள்ளத்தில்,
ஏராளமானோர் வாக்காளர் அடையாள அட்டைகளை இழந்துள்ளனர். எனவே, அவர்களுக்கு, இலவச அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே, வெள்ளம் பாதித்த பகுதிகள் விவரத்தை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார் மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டு உள்ளோம். கிடைத்ததும், புதிய அட்டை அச்சிட்டு, ஓட்டுச்சாவடி அலுவலர் மூலம், வீட்டில் வழங்க முடிவு செய்துள்ளோம்.இதில் விடுபட்டோர், எஸ்.எம்.எஸ்., செய்தால், அட்டை வழங்குவது குறித்து, ஆலோசித்து வருகிறோம். வெள்ளம் பாதித்த மாவட்டங்களில், பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அங்கு ஓட்டுச்சாவடி அலுவலர்கள், 14ம் தேதி முதல், கள ஆய்வு செய்ய உள்ளனர்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.