நாளை முதல் மீண்டும் சட்டசபை

சென்னை:ஒன்பது நாள் இடைவெளிக்கு பின், சட்டசபை, நாளை கூடுகிறது.
மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தி, நிதி ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் பெறுவதற்காக, ஆகஸ்ட், 24ம் தேதி, சட்டசபை கூட்டம் துவங்கியது; இம்மாதம், 4ம் தேதி வரை நடந்தது.

பின், முதலீட்டாளர் மாநாட்டை ஒட்டி, சட்ட சபை ஒத்தி வைக்கப்பட்டது. ஒன்பது நாள் இடைவெளிக்கு பின், நாளை மீண்டும் சட்டசபை கூடுகிறது; வருவாய் மற்றும் செய்தி துறை மானிய கோரிக்கைகள் மீது, விவாதம் நடைபெற உள்ளது. அமைச்சர்கள் உதயகுமார், ராஜேந்திர பாலாஜி ஆகியோர் விவாதத்திற்கு பதில் அளிக்கின்றனர்.