தமிழகத்தில் ஒரு வாரம் துக்கம்அரை கம்பத்தில் தேசியக்கொடி

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவையொட்டி, தலைமைச் செயலகம் உட்பட, அனைத்து அரசு அலுவலகங்களிலும், நேற்று தேசியக் கொடி, அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. 'ஒரு வாரம் துக்கம் அனுஷ்டிக்கப்படும்' என, தலைமைச் செயலர் ஞானதேசிகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
 

            அதன்படி, நேற்று, தலைமைச் செயலகம் அமைந்துள்ள கோட்டையிலும், மற்ற அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசியக் கொடி, அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டது. கலாம் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து நேற்று பணி செய்தனர்.