ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்விற்கான அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாக வாய்ப்பு

இதுகுறித்து பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் திரு.இரவிச்சந்திரன் கூறியாதவது: 16.06.2015 அன்று பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களை சந்தித்து கலந்தாய்வு குறித்து
கோரிக்கையின் போது, பொது மாறுதல் கலந்தாய்விற்கான அரசாணை இடைத்தேர்தல் முடிந்தபின் வெளியாகும் எனவும், அதன் பிறகு மாறுதல் கலந்தாய்விற்கான தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளதாகவும்,   மேலும் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பட்டியலில் 30 பேர் வரை புதியதாக இடம் பெற்றுள்ளதால், ஏற்கெனவே வெளியிடப்பட்ட பட்டியலில் 30 பேர் வரை பின்னுக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாகவும், இறுதி செய்யப்பட்ட பட்டியல் இம்மாத இறுதியில் வெளியாகும் எனவும் தெரிவித்தார்.