பஸ் படிக்கட்டில் பயணிக்கும் மாணவர்கள்: இலவச பயண அட்டையை திரும்ப பெற உத்தரவு

'பஸ் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களின், இலவச பயண அட்டையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என, பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை செய்துள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் எஸ்.கண்ணப்பன், பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள
சுற்றறிக்கை விவரம்:பள்ளி மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில், பயணம் செய்வதை தவிர்க்க, உயர் நீதிமன்ற உத்தரவு அடிப்படையில், உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.போக்குவரத்துத் துறை, காவல் துறை, பள்ளிக் கல்வித்துறை மற்றும் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட, பல்வேறு பரிந்துரைகளை உயர்மட்ட குழு பரிந்துரைத்துள்ளது.அதில், பள்ளிக் கல்வித்துறை எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, வழிகாட்டு நெறிமுறைகள்
உருவாக்கப்பட்டுள்ளன.டூபடிக்கட்டு பயணத்தால் ஏற்படும் விபத்துகள் பற்றி, பள்ளிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.டூபோக்குவரத்துத் துறை வழங்கும் நோட்டீஸ், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகள் மூலம், விபத்து பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
டூபடிக்கட்டில் பயணம் செய்வதால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் விபத்துகளை சித்
தரிக்கும் வகையில், போக்குவரத்துத் துறை தயாரித்த குறும்படங்களை, மாணவர்களுக்கு காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.டூபெற்றோர் ஆசிரியர் கழக கூட்டங்களில், போக்குவரத்துத் துறை மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகளை பங்கேற்கச் செய்து, படிக்கட்டு பயணம் தவிர்க்க, பெற்றோருக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும்.டூபஸ் படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்களை, போக்குவரத்து போலீசார் முதல்
முறையாக அடையாளம் கண்டு, பள்ளி நிர்வாகத்துக்கு தெரிவிக்கும்போது, அந்த மாணவரை, பள்ளி நிர்வாகம் எச்சரிக்கை செய்ய வேண்டும்.டூஅதே மாணவர் தொடர்ந்து படிக்கட்டில் பயணம் செய்வதைக் கண்டறிந்தால், அவரின் பெற்றோரை அழைத்து, அவர்கள் முன்னிலையில் உரிய அறிவுரை வழங்க வேண்டும்.டூபடிக்கட்டு பயணம் தவிர்ப்பது, அதனால் ஏற்படும் விளைவு கள், போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவது குறித்து, பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.டூபஸ் நிறுத்தங்களில் விழிப்புணர்வு அட்டைகளை வைப்பது, பாதுகாப்பு முறைகள் குறித்த நோட்டீஸ் வினியோகம்
செய்வது, நாளிதழ், ரேடியோ மற்றும் 'டிவி'களில் வெளியாகும் செய்திகளை தெரிவித்து, விழிப்புணர்வு
ஏற்படுத்த வேண்டும்.டூபோக்குவரத்துத் துறை பலமுறை எச்சரித்தும், தொடர்ந்து இத்தகைய செயல்களில் ஈடுபடும் மாணவர்களின் இலவச பஸ் பயண அட்டை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்து, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை முற்றிலும் தவிர்க்க ஏற்பாடு செய்து, தலைமை ஆசிரியர்கள் அறிவுரை வழங்க வேண்டும்.
டூபஸ் தினம் கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும் என்று உயர்மட்ட குழு பரிந்துரை செய்திருப்பதால், தங்கள் பள்ளி மாணவர்கள், இதுபோன்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதை தவிர்க்க, தலைமை ஆசிரியர்கள் உரிய அறிவுரை வழங்க வேண்டும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.