பி.இ. முடித்தவர்களும் பி.எட். சேர புதிய திட்டம்

பொறியியல் பட்டப் படிப்புகளான பி.இ., பி.டெக். முடித்தவர்களும் பி.எட்.  (ஆசிரியர் கல்வியியல் கல்வி) மேற்கொள்ளும் வகையில், புதிய திட்டத்தை தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) அறிமுகம் செய்ய உள்ளதாக சந்தோஷ் பாண்டா கூறினார். 
 
          அறிவியல் ஆசிரியருக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இப்போது மிகக் குறைந்த அளவிலேயே அறிவியல் ஆசிரியர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கையை உயர்த்தும் நோக்கத்தில் இந்த முடிவை என்.சி.டி.இ. எடுத்துள்ளது.
அதன்படி, பி.இ., பி.டெக். பொறியியல் படிப்புகளில் இயற்பியல், வேதியியல், கணிதப் பாடங்களை ஒரு பகுதியாகக் கொண்டு படித்தவர்கள் பி.எட். படிப்பை மேற்கொண்டு, பள்ளிகளில் அறிவியல் ஆசிரியராக சேரலாம் என்றார் அவர்.