ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவள்ளூர் மாவட்ட ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று முன்தினம் நடந்தது. மாவட்ட பொதுச் செயலர் தாஸ் கோரிக்கை விளக்கவுரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில், ''ஆசிரியர்களுக்கு ஊதியம் காலம் தாழ்த்தி வழங்கப்படுகிறது. இதை சீர்படுத்த வேண்டும். வருங்கால வைப்பு நிதி கடன், ஈட்டிய விடுப்பு தொகை பல மாதங்களாக நிலுவை உள்ளதை உடனே வழங்க வேண்டும். மேலும், இக்கோரிக்கைகளை கேட்டு வலியுறுத்திய திருத்தணி ஒன்றியம், சீனிவாசபுரம் நடுநிலைப் பள்ளி ஆசிரியர் ரவிக்குமார் மீது ஒரு தலைப்பட்சமாக நடவடிக்கை எடுத்த, உதவி தொடக்க கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.