ஐகோர்ட்டுக்கு தசரா விடுமுறை அறிவிப்பு

ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் பொன்.கலையரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

       தசரா பண்டிகையை முன்னிட்டு 26-ந் தேதி முதல் அக்டோபர் 5-ந் தேதி வரை ஐகோர்ட்டுக்கு விடுமுறை விடப்படுகிறது. இந்த விடுமுறை காலங்களில் அவசர வழக்குகள் மட்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.மகாதேவன் ஆகியோரும், ஐகோர்ட்டு மதுரை கிளையில் நீதிபதிகள் கே.பி.கே.வாசுகி, எஸ்.விமலா ஆகியோரும் செப்டம்பர் 30-ந் தேதி அவசர வழக்குகளை விசாரிப்பார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.